திருப்பூர், நவ. 24 –
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட கணியாம்பூண்டி பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படக்கூடிய கழிவு நீர் வெளியேற வழி இன்றி அருகில் இருந்த காலி இடத்தில் தேங்கி இருந்த நிலையில் இன்று மழை பெய்ததால் கழிவுநீருடன் மழை நீரும் சேர்ந்து குடியிருப்புக்குள் புகுந்துதால் தொற்றுநோய் பருவம் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருமுருகன், பூண்டி காவல் நிலைய போலீசார் மற்றும் காவல் ஆய்வாளர் இளங்கோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் என்ன கோரிக்கை என்று கூட கேட்காமல் வந்தவுடன் அவர்களே அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நினைத்தார்.
இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் படுத்து உருண்டு போலீசாரை கண்டித்து முழக்கங்களை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் 1 மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



