திருப்பூர், டிச. 18 –
திருப்பூர் குமரன் சிலை அருகில் இடுவாயில் குப்பை கொட்டும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு போலீசாரின் அனுமதி மறுத்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேசிய போது அவரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு; பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து 800 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு.
திருப்பூர் குமரன் சிலை அருகில் இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்டும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது,போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, திருப்பூர் குமரன் சிலை அருகே 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டதுக்காக குமரன் சிலை அருகே வந்திருந்த பா.ஜ. வினரை, போலீசார் கைது செய்து பஸ்ஸில் ஏற்றத் துவங்கினர். அருகிலுள்ள டீக்கடைகளில் டீ அருந்திக் கொண்டிருந்தவர்களை போலீசார் அடையாளம் கண்டு, உள்ளே புகுந்து இழுத்துச் சென்று பஸ்ஸில் ஏற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கு எதற்கும் செவிமடுக்காத போலீசார் அனைவரையும் குண்டுக்கட்டாக வேனில் ஏற்றினர்,அதனைத் தொடர்ந்து குமரன் சிலை அருகில் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இடுவாய் கிராமத்தில் குப்பை கொட்டும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசியபோது திடீரென கூட்டத்தின் நடுவே புகுந்த போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
அதற்கு ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த பாஜகவினர் 800க்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது போலீஸாருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து போலீசார் தொண்டர்களையும் கைது செய்து வானில் ஏற்றியதால் குமரன் சிலை அருகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



