தருமபுரி, நவம்பர் 10 –
தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி அருகே உள்ள மணியம்பாடி பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழல் கூடத்தை ஊரக வளர்ச்சி துறையினர் ஜேசிபி மூலம் இடித்து தகர்த்தப்பட்டு புதிதாக நிலைக்கூடத்தை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நிழற்குடம் இடித்து தகர்க்கப்பட்டதை அறிந்த கிராம மக்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல், எதற்காக நிழல் கூடம் இடிக்கப்பட்டது என கேள்வி எழுப்பி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஊரக வளர்ச்சி துறை கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, இந்த தகர்க்கப்பட்ட நிழல் கூடம் ஏற்கனவே பழுதடைந்து இருப்பதாகவும், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த நிழற்கூடத்தை இடித்து, புதிதாக கட்டப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டால் மக்கள் பாதிக்காத வகையில் செயல்படும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என பிடிஓ செல்வம் மக்களிடம் எடுத்துக் கூறினார்.
மேலும் இது இடிப்பதற்கு முன்பாகவே மக்களிடம் தீர்மானம் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்பு இதனை அறிந்த மக்கள் கலைந்து சென்றனர். பழுதடைந்த நிழல் கூட்டத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



