கிருஷ்ணகிரி மார் 28: கிருஷ்ணகிரியில் உள்ள தர்மபுரி ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ராம கவுண்டர் கலந்துக் கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்பாட்டத்தில் ‘ தமிழக அரசு கடந்த நான்கு மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்., லிட்டருக்கு 4 ரூபாய் நிலுவை தொகை உயர்த்தி வழங்க வேண்டும்.,
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்., சத்துணவில் பால் சேர்க்க வேண்டும்., விவசாயிகளுக்கும் கறவை மாடுகளுக்கும் இலவச காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300 கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன கோசங்களை எழுப்பினர்.



