ராமநாதபுரம், மே 3-
வக்பு திருத்த சட்டம் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த முஸ்லிம்கள் அணி அணியாக திரள வேண்டும் இதற்கான முதல் கட்ட போராட்டம் தான் தொண்டியில் தற்போது துவங்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஒவ்வொருவரையும் போராட்டத்திற்கு அழைக்கிறேன் இது நமக்கான ஒரு சவால் என்று தமுமுகவின் மாநில பேச்சாளர் கோவை செய்யது உரக்க குரல் எடுத்து அறைகூவல் விடுத்தார்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டி பேரூர் சார்பில் வக்பு திருத்த சட்டம் பற்றிய விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தொண்டி பேரூர் தலைவர் காதர் தலைமையில் தொண்டியில் நடைபெற்றது. கூட்டத்தில் தொண்டி மமக செயலாளர் பரக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான், மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜி ஃப்ரீ, மாவட்ட செயலாளர் பொறியாளர் ஜாவித் அசாம், மாவட்ட துணை தலைவர் சாகுல் ஹமீது, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி, மகளிர் அனிநிர்வாகி கவுன்சிலர் பானு ஊடக அணி பஹுருல்லாஹ் சுல்த்தான், தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் சையத் அலி, தொண்டி அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது பேசியதாவது;
வக்பு சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளின் மீது நடத்தப்படுகிற ஒன்றிய அரசின் தாக்குதல் தான் வக்பு திருத்த சட்டம். இதை ஒருபோதும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர்களின் மதத்தின் படி வாழவும் வழிபடவும் நிர்வாகம் நடத்தவும் உரிமையை இந்திய அரசியல் சட்ட சாசனம் வழங்கியுள்ளது.
அதை சிறிதளவும் மதிக்காத இந்த ஒன்றிய அரசு அதற்கு எதிராக அதை பின்பற்றுகிற மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவதில் உள்ளது தான் இந்த வக்பு திருத்த சட்டம் என்பது. இது முஸ்லிம்களுடைய ஒன்பது லட்சத்தி 40 ஆயிரம் ஏக்கர் வக்பு சொத்தை ஒட்டுமொத்தமாக மோசடியால் அபகரிக்க ஒன்றிய அரசு தீர்மானித்து பாராளுமன்றத்தில் இரவோடு இரவாக இந்த சட்டத்தை நிறைவேற்றி முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்து விளைவித்துள்ளது. எனவே இதை கண்டித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருவதில் ஒன்றுதான் இந்த பொதுக்கூட்டம் இது ஒரு முதல் கட்ட போராட்டம் இனி தொடரும் என்று போராட்டம் பற்றி விளக்கமாக சிறப்புரை நிகழ்த்தினார். தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக்பாட்சா பண்ணூல் ஆசிரியர் எம்ஆர்எம் அப்துல் ரஹீம் அவர்கள் பெயரை தொண்டி அரசு நூலகத்திற்கு வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ப அப்துல் சமது சட்டமன்றத்தில் வலியுறுத்தியதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் தொண்டி அரசு மருத்துவமனை தரம் உயர்த்துவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் , தொண்டி போக்குவரத்து பணிமனை உடனடியாக வருவதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வருகின்ற மே 31ஆம் தேதி மதுரையில் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வக்பு திருத்த சட்டம் மற்றும் ஊராளுமன்றம் முதல் நாடாளு மன்றம் வரை சரியான பிரதிநிதித்துவம் வேண்டி இரட்டைக் கோரிக்கை தென் மண்டல மாநாடு மதுரையில் நடக்க உள்ளது அதில் தொண்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து அதிகமான மக்கள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் முகமது மைதீன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தொண்டி பேரூர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



