தேனி மாவட்டம், மே -23
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட சுருளிப்பட்டி ஊராட்சி நுழைவாயிலில் குப்பைக் கழிவுகளும் சாக்கடை நீர் சாலையில் ஓடுகின்றன அதனை கண்டும்காணாமலும் சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் பார்த்து ரசித்து வருவதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர் இப்பகுதியில் உள்ள “சுருளி அருவி” ஆன்மீக தலமாகவும் சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்ட மாநிலத்திலிருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர் சுருளிப்பட்டி ஊராட்சி நுழைவு பகுதியில் குப்பைக்கழிவுகளும் ஹோட்டலில் பயன்படுத்தும் இலைகளும் சாலையின் ஓரங்களில் கொட்டப்படுகின்றன மேலும் சாக்கடை நீரும் சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் வீசுகிறது எனவே அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் முகம் சுழித்தவாரு சென்றுகொண்டு உள்ளனர் இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நிர்வாகம் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர் வாகன ஓட்டிகளும் அப்பகுதி பொதுமக்களும் நோய்த்தொற்று பயத்துடன் இப்பகுதியில் சென்றவாறு உள்ளனர் மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேனி மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி சுற்றுலா பயணிகளும் உள்ளூர் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்



