தருமபுரியில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் முப்பெரும் விழா தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றியத்தின் கொடி ஏற்றும் விழா, சங்கத்தின் கல்வெட்டு திறப்பு விழா, மாவட்ட பொதுக்குழு கூட்டம், நல் நூலகர் விருது பெற்ற திருநாவுக்கரசு இரண்டாம் நிலை நூலகருக்கு பணி நிறைவு பாராட்டு விழா, புதியதாக பதிவி ஏற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு மாநில துணைத்தலைவர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலாளர் மாதேஸ்வரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளயபதி வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் முத்துராமலிங்கம் ஒன்றிய கொடியை ஏற்றி வைத்தோம், கல்வெட்டை திறந்து வைத்தும் சிறப்புரையாற்றினார். மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தருமபுரி மாவட்ட தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்திற்கு 2025 -2027 ஆம் ஆண்டிற்கான மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. மாவட்ட தலைவராக மாதேஸ்வரன், மாவட்ட செயலாளராக தும் பாராவ், மாவட்ட பொருளாளராக பூபதி, மாவட்டத் துணைத் தலைவர்களாக துரை, சுபாஷ் சந்தர், புருசோத் குமார், தமிழ்ச்செல்வி, தில்தார், மாவட்ட இணைச் செயலாளராக பொன்ராஜ், இளையபதி, மகேஸ்வரி, ராஜேந்திரன் ,மாவட்ட துணைச் செயலாளராக சக்திவேல், ஆதிரை, எல்லம்மாள், அமைப்புச் செயலாளராக சாம்ராஜ், தலைமை நிலைய செயலாளராக நீலமோகன், பிரச்சார செயலாளராக கதிர்வேல், மகளிரணி செயலாளராக உமாராணி, மகளிரணி இணை செயலாளராக கோமதி, மத்திய செயற்குழு உறுப்பினராக காசி, தணிக்கையாளராக வனிதாமணி ஆகியோர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 250- க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பூபதி நன்றியுரை யற்றினார்.



