சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர்கள், விரைந்து சென்று அரசு விரைவு பேருந்தை திருப்புவனத்தில் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த வாக்குவாதத்தால் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. அப்போது தொடர்ந்து ஒளி எழுப்பிக் கொண்டிருந்த கார் ஓட்டுனரை அந்த இளைஞர்கள் வெளியே இழுத்து போட்டு அடித்து உதைத்தனர். தாமதமாக வந்த போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பிறகு போக்குவரத்தை சீர் செய்தனர். திருப்புவனம் அது சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி செல்வதாலும், ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதுமே விபத்துக்கு காரணம் என கூறப்படும் நிலையில் காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் இது போன்று தொடர்ந்து விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



