திருப்பூர் அக். 1
தெற்கு வட்டாட்சியாளர் அலுவலக பிரதான நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டு 500 மீட்டர் தூரம் நடந்து அலுவலகத்தை சுற்றி வரும் பொது மக்களின் அவல நிலை குறித்து விரைவாக தீர்வு கண்டு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பூட்டி கிடைக்கின்ற தெற்கு வட்டாட்சியாளர் அலுவலக பிரதான நுழைவு வாயிலின் கதவை திறக்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வு காண வேண்டுவது சம்பந்தமாக இன்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தா .கிறிஸ்துவராஜ் அவர்களிடம் தமிழ்நாடு மின்சார வாரிய பொது ஒப்பந்த தொமுச கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ஈ.பி.சரவணன் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம்மாக கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி22ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது அப்போது திருப்பூர், காங்கேயம், அவிநாசி, பல்லடம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை,என ஏழு தாலுகாவுடன் இயங்கியது நிர்வாக வசதிக்காக மாநில அளவில் பெரிய தாலுகாவாக இருந்த திருப்பூர் வட்டத்தை இரண்டாக தெற்கு மற்றும் வடக்கு என பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் வடக்கு வட்டாட்சியாளர் அலுவலகம் ஏற்கனவே இருந்த குமரன் சாலையே இயங்கி வருகிறது. தெற்கு வட்டாட்சியாளர் அலுவலகம் தாராபுரம் சாலையில் உள்ள செவந்தம்பாளையம் பகுதியில் புதிதாக தெற்கு வட்டாட்சியாளர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகின்றது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக இருந்த தெற்கு வட்டாட்சியாளர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் தெற்கு நோக்கி இருப்பதால் வாஸ்து சரி இல்லை எனக் கூறி முற்றிலுமாக கதவை மூடி அடைத்து விட்டு சுமார் 500 மீட்டர் சுற்றி பின்புறம் உள்ள சுவரை இடித்து வாயிற் கதவு வைத்து அதன் வழியாக தான் அலுவலர்கள் பொதுமக்கள் என அனைவரும் வரவேண்டும் என கூறி நுழைவு வாயில் கதவை மூடி அடைத்து வைத்துள்ளார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் வயதான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்கதவு அடைக்கப்பட்டுள்ளதால் சுமார் 500 மீட்டர் தூரம் சுற்றி மிகுந்த சிரமப்பட்டு தெற்கு வட்டாட்சியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வு காண வேண்டுமென தொமுச கூட்டமைப்பு சார்பில் மாநில செயலாளர்
E.B. சரவணன் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் மனு அளித்தனர்.