மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு எழுச்சி முழக்கம் தமிழின போராளி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும்,
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான தமிழன் தி. வேல்முருகன் அவர்களின் ஆணைக்கிணங்க
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட தலைவர் இரா.அந்தோணி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அலெக்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் முகமது ரபீக் வரவேற்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மலர் தூவி கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநகரப் பொருளாளர் லியோ, நகர துணைத்தலைவர் ரகுநாதன் , துணைச் செயலாளர் சாந்தி, மகளிர் அணி மாநகர துணை தலைவி சந்திரா, ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட செய்தி தொடர்பாளர் பி.இப்ராகிம்கான், ஊடக பிரிவு யாசர் அரஃபாத், ஜே.ஜே. நகர பொறுப்பாளர் பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மகளிர் அணி செயலாளர் சுமதி நன்றி கூறினார்.
திண்டுக்கல்லில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்மே -18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி.



