திண்டுக்கல்லில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக கலைச்சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சி திண்டுக்கல் நேருஜி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் நாடக நடிகர் சங்கத்தின் தலைவர் ஆர். முருகேசன் தலைமை தாங்கினார்.திண்டுக்கல் நாடக நடிகர் சங்கத்தின் பொருளாளர் என்.பி. லோகநாதன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் நாடக நடிகர் சங்கத்தின் செயலாளர் கே. ஜோசப் வரவேற்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி, நாடக நடிகர் சங்கத்தின் கௌரவ ஆலோசகரும், மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் மாவட்ட தலைவரும், சமூக ஆர்வலருமான டாக்டர். லயன். எஸ். சகாய செல்வராஜ், தாசில்தார் ஜெயபிரகாஷ், வி.ஏ.ஓ. கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக கலைச் சங்கமத்தின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் நாடக நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.எஸ். வீரமணி, துணைச் செயலாளர் கே.ஆர். விஜயகுமார், நிர்வாகிகள் கே.ஏ. சாமிநாதன், ஆர்.எம். எஸ்.மணி, வி.ஆர். வேல்முருகன், எம். எஸ். ஆறுமுகம், முருகவள்ளி, பரத்குமார் , திண்டுக்கல் அபூர்வ ராகாஷ் இசைக்குழுவின் கிராமிய தெம்மாங்கு நிகழ்ச்சி கிராமிய இசைக்குழு ஜோதிராம், சிந்து உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாக குழு உறுப்பினர்
எம். ஆர்.எம். பாலசுப்பிரமணியன் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics