மதுரை மண்டல ரயில்வே கோட்டம் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
வார இறுதி விடுமுறை காலக் கூட்ட கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரம் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில் (06053) ஜூன் 14 மற்றும் 16 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும் மறு மார்க்கத்தில் நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் (06054) ஜூன் 15 17 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 01.20 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 03.00 மணிக்கு தாம்பரம் சென்று சேரும் இந்த ரயில்கள் செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாச்சலம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி திருநெல்வேலி வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த சிறப்பு ரயில்களில் 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் , 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



