நிலக்கோட்டை,மார்ச்.08:
தேர்வுகள் துவங்கியுள்ள நிலையில் நிலக்கோட்டையில் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வீட்டின் பாத்ரூமில் தூக்கு போட்டு தற்கொலை,காவல்துறையினர் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, இபி காலனி நாகம்மாள் கோவில் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் வயது 40. இவரது மகள் இனியா வயது 13. இவர் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணிக்கு பாத்ரூம் சென்றவர் ஒரு மணி நேரமாகியும் வெளியே வரவில்லை. இதைப் பார்த்த லோகநாதன் பாத்ரூம் சென்றது இல்லை இன்னும் வரவில்லையே என்று கதவை தட்டி அழைத்துள்ளார். பதில் வரவில்லை. உடனடியாக கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது துப்பட்டாவால் பாத்ரூமில் கொக்கியில் தூக்கு போட்டு இனியா தொங்கிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த லோகநாதன் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இனியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நிலக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது விட்டு விசாரணை செய்ததில்,தேர்வுகள் துவங்கி மாதிரி தெரிவுகள் நடைபெற்று வரும் நிலையில் மாதிரி தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததாக கூறி ஆசிரியர்கள் மனைவியை தனியாக அமர வைத்ததாகவும் அதனால் மனம் உடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது,
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் விறுவிறுப்பாக தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நிலக்கோட்டையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திடீரென்று ஏழாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.