பல்லாவரம், நவம்பர் 24 –
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரில் உள்ள மரியநிவாஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கு எதிரான போதை மருந்து விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் யோகா, சிலம்பம், காரத்தே உலகசாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல குழுக்களாக யோகா, சிலம்பம், கராத்தே செய்து அசத்தினர். 14 நிமிடம் 11 நொடி இடைவிடாமல் யோகா, சிலம்பம், காரத்தே ஒவ்வொன்றையும் மாணவர்கள் செய்து காட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
14 நிமிடம் 11 நொடி தொடர்ந்து கண்மூடி யோகா, சிலம்பம், காரத்தே செய்த மாணவர்கள் நோவா புக் ஆப் வெல்ட்டு ரிக்கார்ஸில் இடம் பிடித்தனர். பின்னர் சாதனை படைத்த மாணவர்களுக்கு நோவா புக் ஆப் ரெக்கார்ஸின் தலைமை நிர்வாக ஆசிரியர் ராஜ்குமார், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை மரியநிவாஸ் மெட்ரிக் பள்ளியின் சேர்மன் ஜெ.ரங்கநாதன், தாளாளர் ஆர்.பத்மினி, துணை சேர்மன் கே.ஆர்.ராகவேந்திரன், முதல்வர் விஜயகுமாரி, துணை முதல்வர் தனசேகரன், காரத்தே, சிலம்பம், யோகா மாஸ்டர் வித்யலட்சுமி, யோகா மாஸ்டர் சசிகலா, கராத்தே மாஸ்டர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.



