தென்காசி தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அலுவலகம் விக்கிரமராஜா திறந்து வைத்தார்
தென்காசி தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு அலுவலகத்தினை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார்.
தென்காசி தெற்கு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா தென்காசியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோல்டன் செல்வராஜ், மாநில இணைச் செயலாளர்கள் வி.டி.எஸ்.ஆர்.இஸ்மாயில், நாராயணசிங்கம்,பாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் முகமது இப்ராகீம் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் பரமசிவன் வரவேற்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேசிய முதன்மை துணைத் தலைவரும், மாநில தலைவருமான ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை வகித்து புதிய அலுவலகத்தை திறந்து வைத்து, கொடியேற்றி வைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில கூடுதல் செயலர் ஆர்.கே.காளிதாசன், மண்டல தலைவர் வைகுண்டராஜா, ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட இணை செயலாளர் எ;ஸ்.ஆர்.சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் அருணோதயம்,குமார்பாண்டியன், முத்துகுமாரசாமி, பாவூர்சத்திரம் காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவர் மகேஷ்குமார், செயலாளர் கண்ணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இளைஞரணி செயலாளர் காளிமுத்து, பாவூர்சத்திரம் வணிகர் சங்க செயலாளர் விஜய் சிங்ராஜ், பொருளாளர் ஆரோக்கியராஜ், விக்னேஷ்குமார், ஸ்ரீ முருகன், செந்தில், செல்வன்,கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் சந்திரமதி என்.ராஜா நன்றி கூறினார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் புதிய பேருந்து நிலையம் முதல் வாய்க்கால் பாலம் வரை ஷேர் ஆட்டோ இயக்க வேண்டும். புறவழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.