கிருஷ்ணகிரி, செப். 5 –
போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மருதேரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை தென்பெண்ணை ஆற்றில் இருந்து மேல தாளங்களுடன் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மூன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தீபாராதனைகளும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை மங்கல இசை உடன் இரண்டாவது யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கடம் புறப்பாடு விமான கோபுரம் கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும். கும்பாபிஷேக விழாவில் துணை காவல் கண்காணிப்பாளர் முத்துகிருஷ்ணன் போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா பாரூர் காவல் ஆய்வாளர் சிவசந்திரன் போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி நாகரசம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா உட்பட கலந்து கொண்ட பக்தகோடிகள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
அறங்காவலர் துறை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களும் கலந்து கொண்டு ஸ்ரீ பட்டாளம்மன் சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலைத்துறை மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



