கிருஷ்ணகிரி, மார்ச் 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓரப்பம் கிராமத்தில் கிராம நத்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தில் சுமார் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த விக்டோரியா வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. இந்த வாரச்சந்தையில் வாரம்தோறும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விளை பொருள்களை கொண்டுவந்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் சிலர் இந்த சந்தையை வருவாய் துறையினரின் மூலமாக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வார்ச்சந்தையை இருப்பு முள்வேலி அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரப்பம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக மேலாக இயங்கி வந்த விக்டோரியா சந்தை ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் வாரச்சந்தையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
ஆனால் இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் எந்த நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிரம மக்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து சாலை ஓரங்களில் பேனர்கள் வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு கறுப்பு கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும் கிராம நிவாக அலுவலகம் முன்பாகவும் கறுப்பு கொடிகளையும் கட்டி வருகின்ற சட்ட மன்றத் தேர்தலை புறக்கணித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே கிராம நத்தம் நிலத்தில் இயங்கி வந்த விக்டோரிய வாரச்சந்தையை சிலர் வருவாய் துறையினர்கள் உதவிகளுடன் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து முள்வேலிகள் அமைத்து உள்ளதால் வாரச்சந்தை நடத்த முடியாத நிலை உள்ளது. ஆகையால் கடந்த 150 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விக்டோரியா வாரச்சந்தையை மீட்டு மீண்டும் வாரச்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும், வாக்கு சேகரிக்க யாரையும் கிராமத்திற்குள் அனுமதிக்க மாட்டோம் என்று நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அடுத்தகட்டமாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அடையாள அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்க போவதாகவும் அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.



