மார்த்தாண்டம், ஏப். 7 –
2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கேரளம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் நாளை 9-ம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அதனை முன்னிட்டு குமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை களியக்காவிளையில் இருந்து படந்தாலுமூடு வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கன்னியாகுமாரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தலைமை வகித்தார். மத்திய ரிசர்வ் போலீசார், மாநில போலீசார், ஊர்க்காவல் படையினர் என 250 க்கும் மேற்பட்டோர் அணி வகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர். நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் களியக்காவிளை பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு படந்தாலுமூடு பகுதியில் நிறைவடைந்தது.



