மயிலாடுதுறையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவிலில் அர்ச்சனை செய்து வழிபாடு.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் மோடி கண்ணன் தலைமையில் மயிலாடுதுறை நகரில் உள்ள வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோவிலில் நரேந்திர மோடி பெயரில் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பாஜக நிர்வாகிகள் பலர் மோடியின் மாஸ்க் (முகமூடி) அணிந்து பொதுமக்களுக்கு மாஸ்க் மற்றும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இதில் பாஜகவினர் வெங்கடேசன், கோவி.சேதுராமன், நஞ்சில்பாலு, ஸ்ரீதர், ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.



