வேலூர் ஏப். 29
வேலூர் மாவட்டம் ,அணைக்கட்டு வட்டம், அத்தியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சக்தி பீடத்தில் 13 ஆம் ஆண்டு சித்திரை பால்குடம் அபிஷேக பெருவிழா தவத்திரு வேம்பு சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில் அம்மனுக்கு பால்குடம் அபிஷேகம் மஞ்சள் குடம் அபிஷேகம் இதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் ஓம் ஸ்ரீ வேம்பு மாரியம்மன் சக்தி பீடம் முதலாம் ஆண்டு விழாவும் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்காநத்தம் பகவதி சுவாமிகள் குங்குமப்பொட்டு சித்தர் சாமிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.



