தஞ்சாவூர். மே 29.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 10 ,12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முரசொலி எம்பி ஏற்பாட்டின் பேரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது
விழாவில் தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கி, மாணவ மாணவிகளை பாராட்டினார் .முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பழனிவேல் எம்எல்ஏக்கள் டி. கே ஜி . நீலமேகம், அசோக்குமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலர் பழனிவேல் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முன்னாள் எம்எல்ஏ ராமச்சந்திரன் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முரசொலி எம்.பி அனைவரையும் வரவேற்றார்
விழாவில் தஞ்சாவூர் நாடாளு மன்ற தொகுதியில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவையாறு, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில் 480க்கு மேல் மதிப்பெண் பெற்ற 100 மாணவ மாணவிகள் பாராட்டப் பட்டனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 5 சட்ட சபை தொகுதிகளில் 10ம் வகுப்பு மாணவர்கள் 41 பேரும், மன்னார் குடி சட்டசபை தொகுதி 14 பேரும், 12ஆம் வகுப்பு மாணவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 5தொகுதிகளில் 35 பேரும் மன்னார்குடி சட்டசபை தொகுதியில் 10 பேரும் அடங்குவர்
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி, சந்தன மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் பாராட்டு கேடயம், புத்தகப்பை மற்றும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன
நிறைவில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை ராகவ் மகேஷ்,அருண் ராஜ், ஆகியோர் தொகுத்து வழங்கினர்



