தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கோயில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. கோயில்களில் பரணி தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அந்தந்த திருக்கோயில் மகாதீபம் ஏற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடைவீதியில் உள்ள ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருதவானேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை யொட்டி சொக்கபனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோன்று கோட்டை மல்லிகார்ஜுனன் கோயில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோயில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், குமாரசாமிபேட்டை சிவ சுப்ரமணிய சுவாமி கோவில், தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயில் ஆகிய அனைத்து கோவில்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



