தருமபுரி மாவட்டத்தில், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறையின் சார்பில் வத்தல்மலையில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன்,சுற்றுலாத்துறை இணை இயக்குநர் புஷ்பராஜ், சுற்றுலாத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகரன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், உதவி சுற்றுலா அலுவலர் பா.கதிரேசன், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்



