நவ. 12
திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியிலுள்ள சக்திநகர் 3வது வீதியில் இருசக்கர வாகனத்தில் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் புகார் தெரிவித்தார்.
உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்ட உணவு கடத்தல் பிரிவு காவல் துறை, வடக்கு வட்ட வழங்கல் துறை , அனுப்பர்பாளையம் காவல் துறை அலுவலர்கள் விரைத்து வந்து அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை இருசக்கர வாகனத்துடன் பிடித்து சென்றனர்.
துரிதமாக உரிய தீர்வுகண்ட மாவட்ட உணவு கடத்தல் பிரிவு காவல் துறை, வடக்கு வட்ட வழங்கல் துறை , அனுப்பர்பாளையம் காவல் துறை அலுவலர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் நன்றி தெரிவித்தனர்.