தென்காசி, செப். 11 –
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், திமுக பொதுக்குழு உறுப்பினர் சாமித்துரை, பொருளாளர் ஷெரிப், ஒன்றிய செயலாளர் ரமேஷ், சிவக்குமார், சீனித்துரை, சேக் முகமது மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



