சிவகங்கை:மே:17
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன . இதில் தேர்ச்சி விகிதத்தில்
தமிழ்நாட்டிலேயே சிவகங்கை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது . சிவகங்கை மாவட்டத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளாக மொத்தம் 278 – பள்ளிகள் செயல்படுகின்றன . இதில் 175 -பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 17, 679 மாணவ , மாணவிகள் தேர்வு எழுதினார்கள் .
இதில் 17,380 மாணவ , மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . சிவகங்கை மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 98.31% ஆகும் . இதுவே தமிழ்நாட்டின் அதிக சதவீதம் ஆகும். இதற்கு அடுத்த நிலையில் 2 -ம் இடத்தை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது . தனியார் பள்ளிகளை தவிர்த்து அரசு பள்ளிகளின் தேர்ச்சியில் சிவகங்கை மாவட்டம் 97.49 சதவீதம் பெற்றிருக்கிறது . கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் இரண்டாம் இடத்தில் இருந்தது . ஆனால் இந்த ஆண்டு முதல் இடத்தை பிடித்திருப்பது எல்லோருடைய கவனத்தையும் சிவகங்கை மாவட்டம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது .
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 11 – சுயநிதி மெட்ரிக்
பள்ளிகள் செயல்படுகின்றன . இதில் காரைக்குடியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் மாணவி கே.தனிஷா 500க்கு 498 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் இருக்கிறார் . இதேபோல் தேவகோட்டையில் உள்ள குழந்தை இயேசு மெட்ரிக் பள்ளியின் மாணவி ஸ்டிபேனியாகுரூஜ் என்ற மாணவியும் 498 மதிப்பிடங்களை பெற்றுள்ளார் . இதே போல் இதே பள்ளியில் படித்த எஸ்.எம் . சுதர்மான் என்ற மாணவரும் 498 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .