மாநில அளவிலான நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான எறிபந்து போட்டி சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாட்டு விளையாட்டு கழகத்தில் 35 மாவட்டத்திலிருந்து அணிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் நிலக்கோட்டை லில்லின் அறிவுசார் குறைபாடுடையோர் பள்ளி பெண்கள் பிரிவில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்ததற்கு திண்டுக்கல் பிச்சாண்டி மகாலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாண்மை Dr.Ln.N.M.B.காஜா மைதீன், திண்டுக்கல் மாநகர கிழக்குப்பகுதி திமுக செயலாளர் A.இராஜேந்திரகுமார் இணைந்து பதக்கம் அணிவித்து சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் நிலக்கோட்டை லில்லின் அறிவு சார் குறைபாடுடையோர் பள்ளி தலைமையாசிரியர் இருதயமேரி, Dr.R.டைட்டஸ், R.நித்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவை V. ஞானகுரு ஒருங்கிணைத்தார்.



