நாகர்கோவில், ஜன. 3-
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி, கடையால் பேரூராட்சிக்குட்பட்ட தலுக்குமலை சமுதாய நலக்கூடத்தில் தலுக்குமலை, வட்டப்பாறை, குறத்திமலை, வெள்ளருக்கு ஆகிய மலைவாழ் பழங்குடியின மக்களிடையே வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பெயர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா கலந்து கொண்டு பேசியதாவது: குமரி மாவட்டத்தில் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்களார்கள் ஒருவரும் 19.02.2026 அன்று வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டுவிடாமல், அனைத்து வாக்காளர்களையும் இறுதி வாக்களார் பட்டியலில் இணைத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் படிவம் 6 பூர்த்தி செய்து கொடுத்து புதிய வாக்காளராக இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து 18வயது பூர்த்தியடைந்த இடம் வாக்காளர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, வழங்கியதைத்தொடர்ந்து அப்படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி ஒரு வாக்காளரும் விடுபடாமல் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.
மேலும் வெளி மாநிலத்தில் படித்து வரும் 18 வயது பூர்த்தி அடைந்த மகளின் பெயரினை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் விதமாக பழங்குடியின தாயிடம் படிவம் 6-ஐ மாவட்ட தேர்தல் அலுலவர் வழங்கினார். நிகழ்ச்சியில் விளவங்கோடு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன், விளவங்கோடு வட்டாட்சியர் வயோலா பாய், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



