கிருஷ்ணகிரி,ஜுன்.9-
தமிழ்நாடு பசுமை இயக்கம், கிருஷ்ணகிரி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் தொகரப்பள்ளி ஊராட்சி தொகரப்பள்ளி ஏரியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் உமாலட்சுமி பிரபு மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பர்கூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுசீந்திரன், ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுமார், ஊராட்சி செயலாளர் சேகர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.



