தென்காசி, மே 21 –
தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் கோவில் அருகில் அமைந்துள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வராஜ் தலைமையில் தென்காசி நகர காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி நேரடியாக இணைகிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் முன்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவையில் இடம் பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், வழக்கறிஞர் சிவா, நகர பொருளாளர் ஈஸ்வரன், சிவாஜி மன்ற கணேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரபீக், சுப்ரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



