குளச்சல், பிப். 18 –
குளச்சல் துறைமுகம் அருகே உள்ள தூண்டில் வளைவு பகுதியில் ஏராளமான நாட்டு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் இன்று காலை திடீரென ஒரு நாட்டு படகில் தீப்பிடித்து எறிந்தது. நேரம் செல்ல அந்த நாட்டு படகுகளின் அருகில் நின்ற மற்ற நாட்டு படகுகளிலும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உடனடியாக இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த விபத்தில் 2 நாட்டு படகுகள் முற்றிலுமாக தீயில் கருகி சேதம் அடைந்தது. மேலும் இரண்டு நாட்டு படகுகள் பாதி அளவு எரிந்து இருந்தது.
துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டு படகுகள் தீப்பிடித்து எரிந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. அதற்கான காரணம் குறித்து குளச்சல் போலீசில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.



