திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக ஆதரவற்ற ஏழை முதியோர்களுக்கு சிகை சீர்திருத்தம் செய்து தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் விவேகானந்தா நகரில் உள்ள ஆர்.கே.ஜி.ஜி. ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாநகராட்சியில் சாலையோர, ஆதரவற்ற ஏழை, எளிய மக்களுக்கு தீபாவளி கொண்டாடுவதற்காக அன்னபூரணி அறக்கட்டளையின் நிர்வாகி K.வேல்குமரன் முன்னிலையில் அவர்களை சிகை சீர்திருத்தம் செய்து, ரூபாய் 16,400 மதிப்புள்ள புத்தாடைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு Rtn. S.சண்முகம் , Rtn.பாரூக் ,Rtn.V.T.R.T.நாகராஜன்,Rtn.ஜெயன்,ரோட்டரி 3000, துணை கவர்னர் Rtn.M.செல்வக்கனி, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn .H.புருஷோத்தமன், செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக Rtn.V.மதன்மோகன் அவர்கள் உதவும் கரங்கள் அறக்கட்டளைக்கு, அன்னதானத் திட்டத்திற்கு ரூபாய் 4000 வழங்கினார்.



