புதுக்கடை, ஜனவரி 31 –
புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் எமல் ராஜ் மனைவி ஷைனி (36). இவரது வீட்டின் அருகில் வசிக்கும் சுஜின் (36), குட்டப்பன் ஆகியோர் சேர்ந்து ஷைனியை பார்த்து அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பேசுவது வழக்கம். இதனால் இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவ தினம் ஷைனி தனது வீட்டின் முன்பு நிற்கும் போது சுஜின் மற்றும் குட்டப்பன் ஆகியோர் சேர்ந்து அவரை மீண்டும் கெட்ட வார்த்தைகள் பேசி, வீட்டில் இருந்த செடி தொட்டிகளை உடைத்து சேதப்படுத்தி, ஷைனிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் சுமார் 2000 ரூபாய் மதிப்பிலான செடி தொட்டிகள் சேதம் அடைந்தது. இது குறித்து ஷைனி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


