நிலக்கோட்டையை சேர்ந்த, விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மாயம். சென்னையில் பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. தூத்துக்குடியில் அவரது ஏ ட்டி எம் மூலம், பணம் எடுத்ததால் போலீசார் தீவிர விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மணிகாரன்பட்டியில் வசித்து வந்தவர், பாலவிநாயகம், இவர் டெல்லி விமானப்படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். விமானப்படையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு, பாலவிநாயகம் சென்னையில் உள்ள ஜேக்குவார் நிறுவனத்தில் பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வந்தார். மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் பாலவிநாயகம், கடந்த நவம்பர் மாதம் பணிக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. மனைவி சந்திரா மற்றும் குடும்பத்தினர், பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், பாலவிநாயகம் மாயமானது குறித்து, நிலக்கோட்டை காவல் நிலையத்தில் அவரது மனைவி சந்திரா புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர், ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். பாலவிநாயகத்தின் திடீரென மாயமானது, அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில், பாலவிநாயகத்தின் ஸ்டேட் வங்கி சேமிப்பு கணக்கில் இருந்து, தூத்துக்குடியில் ஏ ட்டி எம் மூலம், பணம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் போலீசாருக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலவிநாயகம் தூத்துக்குடியில் இருக்கிறாரா அல்லது, வேறு எங்கும் சென்றாரா என்பது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விமானப்படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற, ராணுவ வீரர் மாயமானது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலவிநாயகத்தின் திடீர்என காணமால் போனதுக்கான காரணம், என்ன என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.