கன்னியாகுமரி அக் 20
கன்னியாகுமரியில் வட்டடக்கோட்டை மற்றும் விவேகானந்த புரம் பகுதியில் உள்ள உணவகங்கள் உட்பட 6 உணவகங்கள், பேக்கரிகள் மளிகை கடைகளில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.செந்தில்குமார் அறிவுரையின்படி அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது குளிர்பதன பெட்டியில் மறு உபயோகத்திற்கு வைக்கப் பட்டிருந்த பழைய இறைச்சி, முந்தைய நாள் சமைக்கப் பட்ட அரிசி சாதம் உட்பட சுமார் 7 கிலோ உணவு பொருட்கள், அழுகிய நிலையில் இருந்த 2 கிலோ எடையுள்ள காய்கறிகள் மேலும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் 2 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப் பட்டன.மேலும் மனித உணவுக்கு தகுதி இல்லாத செயற்கை நிறமிகள் சேர்ந்த சுமார் 2 கிலோ எடையுள்ள கலர் அப்பளம் லீபுரம் பகுதியில் மளிகை கடையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்கள் மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு போன்ற விதிமுறைகள் மீறல்கள் குறித்து இரண்டு உணவகங்களுக்கு 6000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.



