கன்னியாகுமரி, நவ. 14 –
பா.ஜ.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எஸ். சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகளை மிஞ்சி அதிக இடங்களில் இமாலய வெற்றி பெற்றுள்ளது பாஜக கூட்டணி.
பிரதமர் மோடி மீது பொதுமக்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை தான் இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது.தமிழக மக்களும் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள் .அந்த நம்பிக்கை வீண் போகாது.
தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வரும் நல்திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு திசைதிருப்பி அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. விளம்பர மாடல் அரசின் இந்த திசைதிருப்புக்கள் முடிவுக்கு வரும்.
பீகார் தேர்தலில் பா.ஜ., கூட்டணி பெற்றுள்ள அமோக வெற்றி. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் தொடரும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்கள், தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.



