சங்கரன்கோவில்,நவ:20
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை மற்றும் நீக்குதல் முகாம் நடந்தது. சேர்ந்தமரம் கிராமத்தில் வாக்காளர் சிறப்பு முகாமினை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு புதிய வாக்காளர்கள் சேர்ப்பது மற்றும் இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குதல் ஆகிய பணிகளை
ஆய்வு செய்தனர். தொடர்ந்து ராஜா எம்எல்ஏ மற்றும் தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முகாமினை ஆய்வு செய்தனர். சேர்ந்தமரம் ஆய்வின் போது ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் கிளை செயலாளர்கள், பாக முகவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.