அரியலூர், ஜூலை:25
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செந்துறை திடீர்குப்பம் அருகில் உள்ளது அரசு ஆதிதிராவிடர் மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் 20 க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.மேலும் இந்த விடுதி செந்துறை டூ உடையார்பாளையம் நெடுஞ்சாலை உள்ளது. விடுதியின் முன்பகுதியில் காடு போல் செடி கொடி வளர்ந்து மாணவிகளை பயமுறுத்தும் அளவிற்கு உள்ளது. மேலும் ஊர்ந்து செல்லக்கூடிய பாம்பு, தேள் போன்ற கொடிய விஷம் உள்ள ஜந்துக்கள் உலாவ கூடிய இடமாக மாறி உள்ளது எனவே மாணவிகள் அச்சமின்றி கவனம் சிதறாமல் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டும் படிக்க இயலும் எனவே விடுதி முன்பு உள்ள செடி கொடி தாம்புகளை அகற்றி விஷ ஜந்துக்கள் அண்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக காடு போல் உள்ள செடி கொடிகளை கற்ற வேண்டும் என மாணவிகளும் பெற்றோர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.