இராமநாதபுரம் ஜுலை 07-
மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தமிழக முதல்வர்,மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
இராமநாதபுரம் கீழக்கரை மேம்பாலம் பணி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு பல்வேறு வேறு அரசியல் காரணங்களுக்காக சில வருடங்களாக பணியில் தொய்வு நிலை ஏற்பட்டு தற்போது பணி நடைபெற்று வருகிறது.
இந்த மேம்பால பணியில் ஏற்படும் தொய்வு நிலை காரணமாக இந்த பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றார்கள்.குறிப்பாக இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மேம்பால பணி காரணமாக சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றது.
இதனால் குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் காலதாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோடு பல்வேறு ஊர்களில் இருந்து இராமநாதபுரம் ரயில் நிலையம் வர வேண்டிய ரயில் பயணிகள் குறித்த நேரத்திற்கு வர முடியாமல் தவிர்கின்றார்கள்.
எனவே!சமூகம் பொதுமக்கள் நலன் கருதி இந்த மேம்பால பணியை துரித படுத்தி உடனடியாக வாகன பயன்பாட்டிற்கு கொண்டு வர இப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும்,எங்கள் மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாகவும் கேட்டு கொள்கின்றோம்.இவ்வாறு தனது மனுவில் கூறியுள்ளார்.