திருச்சி, அக்டோபர் 15 –
தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளுக்கான நம்பகமான பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன், திருச்சி – சென்னை டிரங்க் சாலையில் சத்திரம் பஸ் நிலையத்தில் மேலசிந்தாமணி, ரம்பா தியேட்டர் அருகே அதன் புதிய கிளையை துவங்கியது. அந்தப் பகுதி மக்கள் தங்கள் குடும்பத்திற்கான தீபாவளி ஷாப்பிங்கை ஒரே இடத்தில் செய்யும் வகையில் ஏராளமான ஆடை ரகங்களுடன் ஷோரூம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கிளையை ரம்பா தியேட்டர் நிறுவனர் என். மாணிக்கம் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர். நாகராஜன் மற்றும் திருச்சி மாவட்ட எக்ஸ்னோரா துணைத் தலைவர் கலாவதி சண்முகம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதல் விற்பனையை தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில் சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார், முதல் விற்பனையை திருச்சி ஜூவல்லரி சங்க தலைவர் விஜயராகவன் பெற்றுக் கொண்டார்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர். நாகராஜன் பேசுகையில், தீபாவளிக்கு முன்னதாக திருச்சியில் ஒரு ஷோரூம் திறப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. பண்டிகை காலத்தில், எங்கள் வாடிக்கையாளர்கள் பாரம்பரியத்துடன் இணைந்திருக்கும் அதே வேளையில் பாரம்பரியம் மாறாத அதேசமயம் நவீன ஆடைகளை அணிந்து தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். திருச்சி எப்போதும் எங்களை அன்புடன் வரவேற்றுள்ளது. தீபாவளி ஷாப்பிங்கை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எங்களின் இந்த ஷோரூம் இங்கு திறக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.



