தருமபுரி, ஆகஸ்டு 12 –
தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் சங்க ஒருங்கிணைப்பாளரும், இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ. பிரதாபன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலை அட்டை பெற்ற அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையான 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். அரசு நிர்ணயம் செய்த தின சம்பளம் ரூ. 336-யை முழுமையாக வழங்க வேண்டும். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.2151 கோடியை உடனே விடுவிக்க வேண்டும். மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமர்ப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்க ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் பைசுஅள்ளி ஜி. மாதையன், அதகப்பாடி ஜி. பச்சாகவுண்டர், வத்தல்மலை ராஜகோபால், இலட்சுமணன், பாப்பம்மாள், இலளிகம் எல்.சி. கிருஷ்ணன், அலமேலு எத்துராஜ், நார்த்தம்பட்டி என்.பி. ராஜி, வெங்கடம்பட்டி வெ.பை. மாதையன், ஏலகிரி ஜி. சம்பத், வி. செல்வம், தடங்கம் மாரியப்பன், கோடுஅள்ளி முண்ணு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி பேசினார்கள். இறுதியில் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ. பிரதாபன் சிறப்புரையாற்றினார்.



