சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம் பெருமாம்பட்டி ஊராட்சி கணவாய் காடு பகுதியில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுர சிலைக்கு எம்.ஜி.ஆர் அவர்களின் 108 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து தலைமையில் மாலை அணிவித்து கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.வீரபாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.மேலும் நிகழ்வில் வீரபாண்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன்,சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் அரியனுர் பழனிசாமி, கவுன்சிலர் நாகராஜ், கிருஷ்ணன்,வீரபாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கேபிள் மணிகண்டன், உதயகுமார்,முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் கிளைச் செயலாளருமான கே.ஏ.மாதேஸ்வரன், எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர் பெருமாள், அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜெகன், அண்ணாமலை,இளங்கோ, அம்மாசி,வையாபுரி,சமய பாலா,பொன்னுசாமி, ஆகியோர் கலந்து கொண்டு கொண்டாடினர்.இதனைத் தொடர்ந்து பெருமாம்பட்டி பகுதியில் எம்ஜிஆர் திருவரப் படத்திற்கு வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பெருமாம்பட்டி கிளைச் செயலாளர் ஏ.கே.பி.குட்டி என்கிற ஆறுமுகம்,செல்வராஜ்,
மற்றும் முக்கிய நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு,
இனிப்புகள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டன.



