தருமபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில் தருமபுரி கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ராமக்காள் ஏரி வளாகத்தில் உள்ள ஈத்கா திடலில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பின் தொழுகையில் பங்கேற்றவர்களுக்கு தங்கள் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இது போன்று தருமபுரி டேகிஸ்பேட்டை, கீழ் மசூதி தெரு, முகமதுஅலிகிளப் ரோடு, மதிகோன் பாளையம், வட்டார வளர்ச்சி காலனி, அண்ணாநகர் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மசூதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.



