கிருஷ்ணகிரி,ஜுன்.20- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பார்வையற்றோர் பள்ளியில் ராகுல் காந்தியின் 54-வது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் பி. சி.சேகர் தலைமையில் நடைபெற்றது. பர்கூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பார்வையற்றோர் பள்ளியில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சிகள் பர்கூர் நகர காஸ் கமிட்டி தலைவர் யுவராஜ், மல்லப்பாடி ஊராட்சி மன்ற முன்னால் தலைவர் ஆர். மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு போர்வை வழங்கப்பட்டது. மேலும் கிருஷ்ணகிரி காலபைரவர் கோயிலில் மற்றும் சூரன்குட்டை சொர்ணாகரஷ்ண பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.



