கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் காரப்பட்டு அடுத்து பெரிய கவுண்டர் கிராமத்தில் பிரகாஷ் த/பெ மணி மற்றும் தருமன் முன்னாள் நிள அளவர் இவர்களின் ஆழ்துளை கிணற்றில் இருந்து சுமார் 50,000 மதிப்புள்ள கேபிள் வயர் மோட்டார் ஆகியவை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர் இது குறித்து ஊத்தங்கரை காவல்துறையில் புகார் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏற்கனவே உப்பாரப்பட்டி அடுத்து மோட்டூர் கிராமத்தில் ராஜாக்கண்ணு த/பெ ராஜேந்திரன் இவர்கள் கிணற்றில் நீர் மூழ்கி மின் மோட்டாரையும் திருடிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஊத்தங்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிது, காவல்துறை தனி கவனம் செலுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை விரைந்து கண்டுபிடித்தால் மட்டுமே திருட்டு சம்பவங்களை தடுக்கப்படும் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.



