தூத்துக்குடி, ஜூலை 15 –
பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று பல்வேறு இடங்களில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கர்மவீரர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட தலைவர் சித்ராங்தகன் மற்றும் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, வ.உ.சி. மார்க்கெட் அருகில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட தலைவர் தலைமையில் நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ் கண்ணன், செல்வராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், வசந்தன் மற்றும் மாநில, மாவட்ட, அணி, பிரிவு நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கர்மவீரர் காமராஜருக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



