குலசேகரம், பிப்.-13
பேச்சிப்பாறை அருகே வலியஏலா என்ற பகுதி சேர்ந்தவர் செல்வன் (57). தொழிலாளி. இவருக்கு லலிதா என்ற மனைவி 2 பிள்ளைகள் உள்ளனர். செல்வன் குடிப்பழக்கம் உடையவர்.
இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பேச்சிப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. அதர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக லலிதா அளித்த புகாரின் பேரில் பேச்சிப்பாறை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியான வழக்கம்பாறை பகுதியில் தண்ணீரில் நேற்று ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் பரவியது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது அது காணாமல் போன செல்வன் உடல் என தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.



