ஆம்பூர்,ஜூன்:9,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் சான்றோர்குப்பம் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் சாலையோரம் இருந்த புளிய மரம் ஒன்று சாலையில் வேரோடு சாய்ந்தது. இதனால் உமராபாத் வாணியம்பாடி செல்லும் சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் புளிய மரத்தின் அருகில் இருந்த மின் கம்பம் சேதம் அடைந்தும், இதே போல் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரது மிதிவண்டியும், பாப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது இருசக்கர வாகனமும் புளிய மரத்துக்கு அடியில் சிக்கி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
தகவலின் பேரில் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி மூலம் சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக உமராபா த் வாணியம்பாடி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாணியம்பாடி, உமராபாத் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் பயணம் மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டதால் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.