தஞ்சாவூர். ஏப்ரல்.29
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது.
மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய 710 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்திரவிட்டார்.
பின்னர், தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்பட்ட திருமதி. கலைச்செல்வி தனது மகள் மேல் நிலை படிப்பு பயின்று தேர்ச்சி பெற்றதற்கான கல்வி உதவி தொகை ரூபாய் 1500 க்கான காசோலையும், தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த செல்வநாதன் ஆரோக்கியசாமி என்பவர் சவுதி அரேபியா நாட்டில் இறந்தததை யடுத்து அவருக்கு சேர வேண்டிய சட்டபூர்வ நிலுவைத் தொகை ரூபாய் 4,77,937காசோலை அவரது குடும்ப உறுப்பினரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மணிமாறன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கமலக்கண்ணன் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.