தி.வ.மலை மார்ச் 27 திருவண்ணாமலை மாவட்டம் வட ஆண்டாப்பட்டு பகுதியில் மயான பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த
மனுவில் இறந்தவர்களின் உடல்களைக் கொண்டு செல்லும் போது வழி விட மறுக்கின்றனர் காலம் காலமாக பொதுமக்கள் சென்று வந்த பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
கடந்த 50 ஆண்டு காலமாக வட ஆண்டப்பட்டு சுடுகாடு மற்றும் இடுகாட்டை பயன்படுத்தி வருகிறோம் மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் செல்ல வழி இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கும் மன உளைச்சல்களுக்கும் ஆளாகியுள்ளோம் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்துள்ளனர்.



